Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Social Science Solutions Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கேள்வி 1.
ஊராட்சி என்பது ________________________ அரசில் அடங்கும்.
அ) மாவட்டம்
ஆ) மாநிலம்
இ) கிராமம்
விடை:
இ) கிராமம்

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம்

கேள்வி 2.
கிராம சுயராஜ்’ என்ற வார்த்தையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ________________________.
அ) காமராசர்
ஆ) மகாத்மா காந்தி
இ) நேரு
விடை:
ஆ) மகாத்மா காந்தி

கேள்வி 3.
மூன்றடுக்கு முறையின் அடிப்படை ________________________ ஊராட்சி.
அ) மாவட்டம்
ஆ) வட்டாரம்
இ) கிராமம்
விடை:
இ) கிராமம்

கேள்வி 4.
ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
அ) மக்கள்
ஆ) வார்டு உறுப்பினர்
இ) மாவட்ட ஆட்சியர்
விடை:
ஆ) வார்டு உறுப்பினர்

கேள்வி 5.
கிராம சபை உறுப்பினர் பணிக்காலம் ________________________ .
அ) 15 ஆண்டுகள்
ஆ) 10 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள்
விடை:
இ) 5 ஆண்டுகள் பயம்

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம்

II. பொருத்துக.

1. குடவோலை வளர்ச்சித்திட்டம்
2. ஊராட்சி மன்றம் கட்டாயப்பணி
3. மரம் நடுதல் பாரம்பரிய தேர்தல் முறை
4. தெருவிளக்கு தன்னார்வ பணி
5. கிராம சபை 500க்கு மேற்பட்ட மக்கள் தொகை

விடை:

1. குடவோலை பாரம்பரிய தேர்தல் முறை
2. ஊராட்சி மன்றம் 500க்கு மேற்பட்ட மக்கள் தொகை
3. மரம் நடுதல் தன்னார்வ பணி
4. தெருவிளக்கு கட்டாயப்பணி
5. கிராம சபை வளர்ச்சித்திட்டம்

III. விடையளி.

கேள்வி 1.
ஊராட்சி மன்றம் என்றால் என்ன?
விடை:
500 மற்றும் 500க்கு மேற்பட்ட மக்களைக் கொண்டிருக்கும். கிராம ஊராட்சியானது ஊராட்சி மன்றம் என அழைக்கப்படுகிறது.

கேள்வி 2.
குறிப்பு வரைக : மூன்றடுக்குப் பஞ்சாயத்து முறை’.
விடை:
பஞ்சாயத்து ராஜ்ஜியம் என்பது மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையாகும். இதில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவை அடங்கும்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம்

கேள்வி 3.
ஊராட்சியின் கட்டாயப் பணிகளில் மூன்றினை எழுதுக.
விடை:

  1. மின்சாரம் வழங்குவது மற்றும் தெருவிளக்குகளைப் பராமரித்தல்.
  2. பொது கிணறு பராமரித்தல்.
  3. குடிநீர் வழங்குவது.
  4. சாலைகள் போடுவது மற்றும் பராமரித்தல்.
  5. கழிவுநீர் கால்வாய்களை ஏற்படுத்துதல்.

கேள்வி 4.
ஊராட்சியின் தன்னார்வப் பணிகளில் மூன்றினை எழுதுக.
விடை:

  1. சாலைகளின் ஓரங்களில் மரம் நடுதல்.
  2. பொது அங்காடிகளை அமைத்தல்.
  3. பூங்காக்கள் ஏற்படுத்துதல்.
  4. தங்கும் விடுதிகள் உருவாக்குதல்.
  5. விளையாட்டு மைதானங்களை உருவாக்குதல்.

கேள்வி 5.
கிராம சபைக் கூட்டம் எப்பொழுது நடைபெறும்?
விடை:
கிராம சபை கூட்டம் வருடத்திற்கு நான்கு முறை கூட்டவேண்டும்.
கிராம சபை கூட்டம் நடைபெறும் நாட்கள் :
ஜனவரி 26                          ஆகஸ்ட் 15
மே 1                                      அக்டோபர் 2

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம்