Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.5

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.5 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.5

கேள்வி 1.
காஷ்மீரில், ஒரு நாள் இரவின் வெப்பநிலை – 5°C. மறுநாள், அவ்வெப்பநிலை 9°C ஆக உயர்ந்தது எனில், அதிகரித்த வெப்ப அளவினைக் காண்க.
தீர்வு:
இரவின் வெப்பநிலை = -5°C
அடுத்த நாள் வெப்பநிலை = 9°C
அதிகரித்த வெப்பநிலை = 9°C – (-5°C)
= 9°C + 5°C
= 14°C

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.5

கேள்வி 2.
ஓர் அணுவிலுள்ள புரோட்டான்கள் நேர்மின்சக்தியையும் (+) எலக்ட்ரான்கள் எதிர்மின் சக்தியையும் (-) பெற்றிருக்கும். ஓர் எலக்ட்ரானும், ஒரு புரோட்டானும் சேரும்போது, அது நடுநிலையை (0) அடைந்து மின்சக்தியை இழக்கிறது எனில், பின் வருவனவற்றின் மின் அளவுகளைக் கணக்கிடுக.
(i) 5 எலக்ட்ரான்கள் மற்றும் 3 புரோட்டான்கள் → 5 + 3 = – 2 அதாவது, இரு எலக்ட்ரான்கள்
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.4 1
(ii) 6 புரோட்டான்கள் மற்றும் 6 எலக்ட்ரான்கள் →
(iii) 9 புரோட்டான்கள் மற்றும் 12 எலக்ட்ரான்கள் →
(iv)4 புரோட்டான்கள் மற்றும் 8 எலக்ட்ரான்கள் →
(v) 7 புரோட்டான்கள் மற்றும் 6 எலக்ட்ரான்கள் →
தீர்வு:
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.4 2

கேள்வி 3.
வெப்பத்தை அளவிட, வழக்கமான செல்சியஸ் பாகைகளுக்கு (°C) பதிலாகக் கெல்வின் அளவுகளை (K) அறிவியலாளர் பயன்படுத்துவர். இரண்டிற்கும் உள்ள உறவைக் கூறும் சமன்பாடு T°C = (T + 273) K பின்வரும் அளவுகளைக் கெல்வினாக மாற்றி எழுதுக.
(i) -275°C
(ii) 45°C
(iii) -400°C
(iv) -273°C
தீர்வு:
(i) T°C = (T + 273) K
= (-275° + 273) K
= 2°K

(ii) T°C = (T + 273) K
= (45° + 273°) K
= 318°K

iii) T°C = (T + 273) K
= (-400° + 273) K
= -127°K

iv) T°C = (T + 273) K
= (-273 + 273) K
= 0°K

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.5

கேள்வி 4.
ஒரு மாணவனின் வங்கிக் கணக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் நிகழ்த்தப்பட்ட பணப் பரிமாற்றத்திற்குப் பிறகு அவனுடைய மீதி இருப்புத் தொகையைக் கணக்கிடுக. அவனுடைய ஆரம்ப இருப்புத் தொகை 7690.
(i) செலுத்திய தொகை ₹485
(ii) எடுத்த தொகை ₹ 500
(iii) எடுத்த தொகை ₹ 350
(iv) செலுத்திய தொகை ₹ 89
(v) மேலும் ₹300 கணக்கிலிருந்து எடுத்திருந்தால், அவரது இறுதி இருப்பைக் காண்க.
தீர்வு:
(i) செலுத்திய தொகை = ₹ 690 + ₹ 485 = ₹ 1175
(ii) எடுத்தது = ₹ 1175 – ₹ 500 = ₹ 675
(iii) எடுத்தது = ₹ 675 – ₹ 350 = ₹ 325
iv) செலுத்தியது = ₹ 325 + ₹ 89 = ₹ 414
(v) எடுத்தது = ₹ 414 – ₹300 = ₹ 114

கேள்வி 5.
மழையில் நனைந்து ஈரமானதால், கவிஞர் தமிழ் நம்பியின் குறிப்பேட்டில் 35 பக்கங்கள் வீணானது. முழுக்களின் உதவியுடன் பின்வருவனவற்றைக் காண்க.
(i) தமிழ் நம்பியால் ஒரு நாளில் 5 பக்கங்கள் எழுதமுடியும் எனில், அவரது எத்தனை நாள் உழைப்பு வீணானது?
(ii) நான்கு பக்கங்களில் 1800 எழுத்துகள் உள்ளதெனில், எத்தனை எழுத்துகளை இழந்தார்?
(iii) அவர் ஒரு பக்கத்திற்கு ₹250 உழைப்பூதியம் பெறுபவர் எனில், அவர் இழந்தத் தொகையைக் கணக்கிடுக.
(iv) கவிமானின் உதவியுடன் தமிழ்நம்பியால் ஒரு நாளில் 7 பக்கங்கள் எழுதமுடியுமெனில், இழந்த பக்கங்களை மீண்டும் எழுத எத்தனை நாட்களாகும்?
(v) கவிமானின் உதவிக்காக, தமிழ்நம்பி தம் உழைப்பூதியத்தில் இருந்து பக்கத்திற்கு ₹ 100 வழங்குகிறார் எனில், கவிமானுக்குக் கிடைக்கும் வருவாயைக் கணக்கிடுக.
தீர்வு:
மொத்த பக்கங்கள் = 35
(i) ஒரு நாளைக்கு 5 பக்கங்கள்
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.4 3
= \(\frac{35}{5}\)
= 7 நாட்கள்

(ii) நான்கு பக்கங்களில் = 1800 எழுத்துக்கள்
1 பக்கத்தில் = 450 எழுத்துகள்
35 பக்கங்களில் = 450 × 35
= 15,750 எழுத்துகள்

(iii) செலுத்தியது = ₹250
அவர் இழந்தது = ₹ 250 × 35
= ₹8750

(iv) இழந்த பக்கங்கள் = 35
கவிமானின் உதவியுடன் = 7 பக்கங்கள்
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.4 4
= 5 நாட்கள்

(v) தமிழ், கவிமானுக்காக ஒரு பக்கத்திற்கு செலுத்திய தொகை =₹ 100
35 பக்கம் = ₹ 100 × 35
= ₹ 3500

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.5

கேள்வி 6.
என்னுடன் 2 ஐக் கூட்டுங்கள். பிறகு 5 ஆல் பெருக்கவும், அதிலிருந்து 10 ஐக் கழிக்கவும். அதனை நான்கால் வகுத்தால் 15 கிடைக்கும் எனில், நான் யார்?
தீர்வு:
எண்ணை என்க.
(i) 2 ஐக் கூட்டுக = x + 2
(ii) 5 ஆல் பெருக்க = 5(x + 2)
(iii) 10 ஐக் கழிக்க = 5(x + 2) – 10
(iv) 4 ஆல் வகுக்க = \(\frac{5(x+2)-10}{4}\)
நான் தருவது 15
\(\frac{5(x+2)-10}{4}\) = 15
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.4 5
5x = 60
x = 12

கேள்வி 7.
காமாட்சி என்னும் பழ வணிகர், 30 ஆப்பிள்களையும், 50 மாதுளைகளையும் விற்கிறார். அவருக்கு, ஓர் ஆப்பிளால் – ₹ 8 இலாபமும், ஒரு மாதுளையால் ₹ 5 நட்டமும் கிடைத்தது எனில், அவரது ஒட்டுமொத்த இலாப நட்ட தொகையினைக் காண்க.
தீர்வு:
ஆப்பிள்களின் எண்ணிக்கை = 30
மாதுளையின் எண்ணிக்கை = 50
ஆப்பிள் விலை = ₹ 30 × ₹8 = ₹ 240
விலை = ₹50 × (-5) = -₹ 250
⇒ 240 + (-250) = -10
₹10 நட்டம்

கேள்வி 8.
ஒரு வறட்சிக் காலத்தில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வாரத்திற்கு 3 அங்குலம் வீதம் குறைகிறது எனில், தொடர்ச்சியான ஆறு வாரக் கால இறுதியில், நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றத்தை அளவிடுக.
தீர்வு:
அணையின் நீர்மட்டம் = 3 அங்குலம்
6 வாரத்தில் அணையின் அளவு = 6 × 3 = 18 அங்குலம்
6 ஆவது வாரத்தில் அணையின் அளவு 18 மாதுளை அங்குலம்

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.5

கேள்வி 9.
புத்தர் கி.மு (பொ.ஆ.மு) 563 இல் பிறந்து, கி.மு (பொ.ஆ.மு) 483 இல் இறந்தார். அவர் கி.மு. (பொ.ஆ.மு) 500 இல் உயிர் வாழ்ந்தாரா? அவருடைய ஆயுட்காலம் எவ்வளவு?
தீர்வு:
புத்தர் பிறப்பு = 563 கி.மு.
= – 563
இறப்பு = 483 BC
= – 483
ஆம். அவர் கி.மு 500ல் உயிர் வாழ்ந்தார்.
ஆயுட்காலம் = (-483) – (-563)
= – 482 + 563
= 80 வருடம்