Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 2 Chapter 2 நீர் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Science Solutions Term 2 Chapter 2 நீர்

பக்கம் 49:

நிரப்புவோமா!

கேள்வி 1.
படத்தை உற்றுநோக்கி, கோடிட்ட இடங்களை நிரப்புக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 1

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 2

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

பதிலளிப்போமா!

அ. நீர் தேவைப்படும் செயல்களுக்கு (✓) குறியிடுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 3

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 4

ஆ. நீரின்றி உங்களால் செய்யக்கூடிய ஏதேனும் நான்கு செயல்களை எழுதுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 5

விடை :
பந்து விளையாடுதல்
படித்தல்
பாடுதல்
சிரித்தல்

பக்கம் 50 :

கலந்துரையாடுவோமா!

கேள்வி 1.
இப்படத்தில் விலங்குகள் நீர் நிலையின் அருகில் காணப்படுகின்றன. அவை ஏன் அங்கு கூடி உள்ளன?

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 6

இப்படத்தைப் பற்றி ஓரிரு வரிகள் எழுதுக.

விடை :

விலங்குகள் குடிப்பதற்கு நீர் தேவை. எனவே அவை நீர் நிலைகளைத் தேடி வருகின்றன.

காட்டில் வாழும் விலங்குகளுக்கும் நீர் தேவை. எனவேதான், அவை காட்டில் உள்ள நீர் நிலைகளைத் தேடி வருகின்றன. நம்மைப் போலவே விலங்குகளும் தாகம் ஏற்படும் போது நீரைப் பருகுகின்றன.

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

பக்கம் 51 :

மாற்றியமைப்போமா!

மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி, பல்வேறு நீர் ஆதாரங்களைக் கண்டறிந்து எழுதுக.

எ.கா. மழை (ழைம்):

கேள்வி 1.
___________ (ரி ஏ)
விடை :
ஏரி

கேள்வி 2.
___________ (டை ஓ)
விடை :
ஓடை

கேள்வி 3.
__________ (ம் குள)
விடை :
குளம்

கேள்வி 4.
__________ (ண கிறு)
விடை :
கிணறு

கேள்வி 5.
__________ (ல் ட க)
விடை :
கடல்

கேள்வி 6.
__________ (ரு பெல்ங்ட க)
விடை :
பெருங்கடல்

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

கலந்துரையாடுவோமா!

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 7

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 8

கண்டுபிடிப்போமா!

குளிர்ச்சியாய் இருக்கும்போது உறைவேன்.
பனிபோல் மென்மையாக விழுவேன்.
சூரிய வெப்பத்தால் உருகி,
மலையில் இருந்து வழிந்து ஓடி வருவேன். நான் யார்?
விடை :
நீர்

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

பக்கம் 53:

பதிலளிப்போமா!

கேள்வி 1.
நீரைச் சேமிக்க உதவும் சில வழிமுறைகளை எழுதுக.
விடை :
1. வாளியில் நீர் நிரம்பி வழிவதைத் தவிர்க்க வேண்டும்.
2. பழங்களையும் காய்கறிகளையும் நேரடியாக குழாயைத் திறந்து கழுவாமல் பாத்திரத்தில் நீரைப் பிடித்து கழுவுதல் வேண்டும்.
3. பல் துலக்கும் போது குழாயை மூடி வைக்க வேண்டும்.
4. பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது உங்கள் நீர்ப்புட்டியில் மீதமுள்ள நீரை தாவரங்களுக்கு ஊற்ற வேண்டும்.

முயற்சிப்போமா!

பின்வரும் வினாக்களுக்கு ( ✓) குறியிடுக, உங்கள் பதில் கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மாறுபட்டால் அருகிலுள்ள கட்டத்தில் அதன் பெயரை எழுதுக.

கேள்வி 1.
நீர் அருந்த பின்வருவனவற்றுள் எதைப் பயன்படுத்துவீர்கள்?

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 9

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 10

கேள்வி 2.
உங்கள் வீட்டில் எந்தப் பாத்திரத்தில் குடிநீர் சேமித்து வைக்கப்படுகிறது?

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 11

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 12

கேள்வி 3.
உங்களுக்கு குடிநீர் எங்கிருந்து கிடைக்கிறது?

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 13

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 14

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

முயற்சிப்போமா!

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 15

கேள்வி 1.
புள்ளிகளை இணைத்து, படத்திற்கு வண்ணம் தீட்டி வாக்கியத்தை முழுமைப்படுத்துக.
விடை :
உங்களுக்குத் தெரியுமா?

கேள்வி 2.
பழங்காலத்தில் மக்கள் நீரை எவ்வாறு சேமித்தனர்?

 

விடை :
பழங்காலத்தில் மக்கள் ஏரி, கிணறு, நீர்த்தொட்டிகள், குளம், நீர்த்தேக்கம் , அணை போன்றவற்றில் நீரைச் சேமித்தனர்.

கேள்வி 3.
ஒவ்வொரு __________ நீரையும் சேமிக்க வேண்டும்.
விடை :
துளி

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

பக்கம் 55 :

விடையளிப்போமா!

அ. கீழ்க்காண்பனவற்றுள் நீரைச் சேமிக்கும் சரியான செயல்களுக்கு (✓) குறியும், தவறான செயல்களுக்கு (✗) குறியும் இடுக.

கேள்வி 1.
நாம் தினமும் நமது வாகனங்களைக் கழுவ வேண்டும். Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 16
விடை :
(✗)

கேள்வி 2.
அதிக மரங்களை நடுவது மழைப் பொழிவினை ஏற்படுத்தும். Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 16
விடை :
(✓)

கேள்வி 3.
நீர்த்தூவி குழாயில் (Shower) குளித்தால் நீரைச் சேமிக்கலாம். Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 16
விடை :
(✓)

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

கேள்வி 4.
மழைநீரைச் சேகரிப்பது அவசியம்.. Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 16
விடை :
(✓)

ஆ. படங்களைப் பார்த்து பின் வரும் வினாக்களுக்கு விடையளி.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 17

நாம் இவற்றில் நீர் நிரப்பும்பொழுது,

கேள்வி 1.
எது குறைந்த அளவு நீரைக் கொண்டிருக்கும்?
விடை :

கேள்வி 2.
எது அதிக அளவு நீரைக் கொண்டிருக்கும்?
விடை :

கேள்வி 3.
எப்படி அவ்வாறு கூற முடியும்?
விடை :
வாளியில் அதிக நீரையும் டம்ளரில் குறைந்த அளவு நீரையும் நிரப்ப முடியும்.

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

பக்கம் 56:

செய்வோமா!

கேள்வி 1.
பல்வேறு செயல்களுக்குப் பயன்படும் நீர் ஆதாரங்களைப் பின்வரும் அட்டவணையில் (✓) குறியிட்டு காட்டுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 18

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 19

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

மதிப்பீடு:

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கேள்வி 1.
நீரின் முதன்மை ஆதாரம் எது?
அ) ஏரி
ஆ) கடல்
இ) மழை
விடை :
இ) மழை

கேள்வி 2.
பூமியில் உள்ள நீரின் அளவில் ___________ அளவு நீரே பயன்படுத்தும் வகையில் உள்ளது.
அ) 3%
ஆ) 0.3%
இ) 30%
விடை :
அ) 3%

கேள்வி 3.
நீரை _____________ வைப்பதன் மூலம் அதில் உள்ள கிருமிகளை அழிக்கலாம்.
அ) கொதிக்க
ஆ) குளிர
இ) வடிகட்ட
விடை :
அ) கொதிக்க

கேள்வி 4.
கொடுக்கப்பட்டவற்றுள் தவறானது எது?
அ) தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் நீர் தேவை
ஆ) நீரை எப்போதும் வீணாக்க வேண்டும்.
இ) நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
ஈ) நீர் அத்தியாவசியமான ஒன்று
விடை :
ஆ) நீரை எப்போதும் வீணாக்க வேண்டும்

கேள்வி 5.
மழை நின்றபின் மழை நீர் எங்கே செல்கிறது?
1) நிலத்தினுள் ஊடுருவிச் செல்லும்
2) தாவரங்கள் நீரை உறிஞ்சிக் கொள்ளும்
3) கடல் மற்றும் பெருங்கடலோடு கலக்கும்
4) ஏரி மற்றும் குளத்துடன் கலந்துவிடும்
அ) 1 மற்றும் 2
ஆ) 1, 3 மற்றும் 4
இ) 1, 2, 3 மற்றும் 4
விடை :
இ) 1,2,3 மற்றும் 4

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக.

கேள்வி 1.
நாம் பருகும் நீரை ______________ (பானை நீர் / குடிநீர்) என அழைப்பர்.
விடை :
குடிநீர்

கேள்வி 2.
குறைந்த, தாழ்வான பகுதியில் நீர் சேகரமாகும் இடத்தை ____________ (கடல் / ஏரி) என அழைப்பர்.
விடை :
ஏரி

கேள்வி 3.
பொதுவாக நீர் ஆதாரங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வது நமது ____________ (கடமை / வேலை) ஆகும்.
விடை :
கடமை

கேள்வி 4.
பூமியின் மிகப்பெரிய நீர் ஆதாரம் _____________ (ஆறு / கடல்)
விடை :
கடல்

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

இ) பொருந்தாததை வட்டமிடுக. –

கேள்வி 1.
அ) ஏரி
ஆ) மலை
இ) குளம்
ஈ) கடல்
விடை :
மலை

கேள்வி 2.
அ) அல்லி
ஆ) தாமரை
இ) ரோஜா
ஈ) ஆகாயத்தாமரை
விடை :
ரோஜா

கேள்வி 3.
அ) மீன்
ஆ) குதிரை
இ) புலி
ஈ) மாடு
விடை :
மீன்

கேள்வி 4.
அ) குளித்தல்
ஆ) தலைவாருதல்
இ) நீந்துதல்
ஈ) துணி துவைத்தல்
விடை :
தலைவாருதல்

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

ஈ) சரியா, தவறா என எழுதுக.

கேள்வி 1.
உயிரினங்களுக்கு நீர் தேவையில்லை.
விடை :
தவறு

கேள்வி 2.
நீரைச் சேமிப்பது நமது கடமையாகும்.
விடை :
சரி
150

கேள்வி 3.
பல் துலக்கும்போது குழாயை மூடி வைக்க வேண்டும்.
விடை :
சரி

கேள்வி 4.
நீர்த்தேக்கத்தைவிட, நீர்த்தேக்கத் தொட்டிகளில் அதிக அளவு நீரைச் சேமித்து வைக்கலாம்.
விடை :
தவறு

உ) ஓரிரு வரிகளில் விடையளி.

கேள்வி 1.
ஏதேனும் மூன்று நீர் ஆதாரங்களின் பெயர்களை எழுதுக.
விடை :
கிணறு, ஆறு, ஓடை.

கேள்வி 2.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் யாவை?
விடை :

  1. கடுமையான தலைவலி.
  2. கை, கால்களில் தடிப்பு (Rashes).
  3. அதிக சோர்வு.
  4. திடீர் காய்ச்சல் – 3 முதல் 7 நாள்களுக்கு மேல் நீடிக்கும்.

கேள்வி 3.
கொசுவினால் பரவும் ஏதேனும் இரண்டு நோய்களின் பெயரை எழுதுக.
விடை :
டெங்கு, மலேரியா.

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

ஊ) பின்வருவனவற்றிற்கு விடையளி.

கேள்வி 1.
வாழ்வின் முதன்மை ஆதாரமாக நீர் கருதப்படுவது ஏன்?
விடை :
நீர் பூமியில் உள்ள வளங்களுள் மிக முக்கியமான ஒன்றாகும். சிறு உயிரினங்கள், தாவரங்கள், விலங்குகள் போன்ற அனைத்து உயிரினங்களும் வாழ நீர் இன்றியமையாதாகும். மக்கள் பல்வேறு தேவைகளுக்கு நீரைப் பயன்படுத்துகின்றனர். எனவே வாழ்வின் முதன்மை ஆதாரமாக நீர் கருதப்படுகிறது.

கேள்வி 2.
வீடுகளில் நீர் சேகரிப்பதற்கான சில வழிமுறைகளை எழுதுக.
விடை :

  1. வாளியில் நீர் நிரம்பி வழிவதைத் தவிர்க்க வேண்டும்.
  2. பழங்களையும் காய்கறிகளையும் நேரடியாக குழாயைத் திறந்து கழுவாமல் பாத்திரத்தில் நீரைப் பிடித்து கழுவுதல் வேண்டும்.
  3. பல் துலக்கும் போது குழாயை மூடி வைக்க வேண்டும்.
  4. பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது உங்கள் நீர்ப்புட்டியில் மீதமுள்ள நீரை தாவரங்களுக்கு ஊற்ற வேண்டும்.
  5. ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் குடிநீர்க் குழாயை மூட வேண்டும்.
  6. தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச தெளிப்பானைப் பயன்படுத்த வேண்டும்.

கேள்வி 3.
நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைப் பட்டியலிடுக.
விடை :

  1. குளங்கள் மற்றும் ஏரிகளை ஆழமாக்குவது.
  2. ஏரி மற்றும் குளத்தின் கரைகளில் மரங்களை நடுவது.
  3. நீர் மாசுபடுவதைக் குறைப்பது.
  4. ஒரே இடத்தில் அதிகமான கிணறுகளைத் தோண்டுவதைத் தவிர்ப்பது.

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

எ) சிந்தித்து விடையளி.

கேள்வி 1.
உங்களுடைய பள்ளியில் நீர் வீணாக்கப்படுவதை எவ்வாறு தடுப்பீர்?
விடை :

  1. ஒவ்வொரு முறையும் குழாயைப் பயன்படுத்தியவுடன் – அதை மூடிவிட வேண்டும்.
  2. குழாய்களில் கசிவு ஏற்படும் போது அதை ஆசிரியர்களிடம் கூறி சரி செய்ய வேண்டும்.
  3. மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளைப் பள்ளியில் அமைக்க வேண்டும்.

கேள்வி 2.
நீர் சேமிப்பு பற்றிய பொன்மொழிகள் சிலவற்றை எழுதுக.
விடை :

  1. மழை நீர் உயிர் நீர்
  2. நீர் இன்றி அமையாது உலகம்